ரயில் விபத்துகளை குறைக்க புதிய தொழில்நுட்பம்: ரயில்வே வாரிய தலைவர் தகவல்

By செய்திப்பிரிவு

ரயில் விபத்துகளை குறைக்க புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என ரயில்வே வாரிய தலைவர் அஸ்வானி லோஹானி தெரிவித்துள்ளார்.

சென்னை ஐசிஎப் ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலை வளாகத்தில் சர்வதேச ரயில் பெட்டிகள் கண்காட்சியை, அஸ்வானி லோஹானி தொடங்கிவைத்து பார்வையிட்டார். முன்னதாக ஐசிஎப் தொழிற்சாலையில் நடந்து வரும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2019 மார்ச் மாதத்துக்குள் அனைத்து ரயில்களிலும் பயோ – கழிவறை வசதி ஏற்படுத்தப்படும். ரயில் விபத்துகளைத் தடுக்கும் நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு கருவி தொடர்பாக தெற்கு மத்திய ரயில்வேயில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனைகள் முடிந்தவுடன் ரயில்வேயில் இந்த புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்படும். ஐசிஎப் தொழிற்சாலையில் மெட்ரோ ரயில் நிறுவனங்களுக்கான பெட்டிகளை தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், இங்கிருந்து மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்குவது குறித்து 9 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

29 mins ago

சுற்றுச்சூழல்

31 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

53 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்