காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென கர்நாடக முதல்வராகப் பதவியேற்க உள்ள குமாரசாமியிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு சார்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு புதுச்சேரி முருகா தியேட்டர் சந்திப்பில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, விஜயவேணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறுகையில், ''கர்நாடக மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்க உள்ள குமாரசாமி, பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்தார், அழைப்பை ஏற்று பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளேன். காவிரி விவகாரத்தில் அனைத்து மாநிலங்களும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குமாரசாமியை சந்திக்கும்போது கோரிக்கை வைப்பேன்'' என தெரிவித்தார்.
இதை மிஸ் பண்ணாதீங்க:
நிபா வைரஸ் பாதிப்பு; தமிழக மக்கள் பீதியடைய வேண்டாம்: சுகாதாரத் துறை செயலாளர் அறிவுறுத்தல்
ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல்: மாநில வருவாயை எப்படி விட்டுத்தர முடியும்?-அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு
12 ஆண்டுகளுக்கு பிறந்த குழந்தை: கொண்டாடி மகிழும் பிரேசில் தீவு
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஜய் அவார்ட்ஸ்
கொல்கத்தா வென்றிருக்கா விட்டால் எனக்கும் கூட ஓய்வுதான்: சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர்
புனே ஆடுகள பராமரிப்பு ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த தோனி
முக்கிய செய்திகள்
சினிமா
13 mins ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
22 mins ago
இந்தியா
28 mins ago
தமிழகம்
38 mins ago
சினிமா
49 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
53 mins ago
இந்தியா
2 hours ago
கல்வி
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
1 hour ago