காஞ்சிபுரம் மாவட்டம் வில்லியம்பாக்கம் பாலாற்றங்கரையில் ஜெகந்நாதன் என்பவருக்குச் சொந்தமான கொய்யாத் தோப்பு உள்ளது. இந்தத் தோப்பை மேலச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மனோகரன்(59) என்பவர் குத்தகை எடுத்துப் பராமரித்து வந்தார்.
மனோகரன் அந்த வழியாக மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் குறித்து ரகசியமாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கொய்யாத் தோப்பில் இருந்த அவர் மாயமானார். அவர் படுத்திருந்த கட்டிலில் ரத்தக்கறை இருந்தது.
இதுகுறித்து அவரது உறவினர்கள் பாலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீஸார் விசாரணை நடத்தியதில் அவ்வழியாக வந்த மணல் கடத்தல்காரர்களுக்கும், மனோகரனுக்கும் தகராறு ஏற்பட்டதும், அதன் விளைவாக அவர் கொலை செய்யப்பட்டு அருகாமையில் உள்ள ஆற்றில் புதைக்கப்பட்டதும் தெரிந்தது.
இதனைத் தொடர்ந்து போலீஸ் மோப்ப நாய் உதவியுடன் மனோகரன் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
ஜோதிடம்
12 hours ago