தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து தேனப்பன் ராஜினாமா செய்துள்ளார்.
இதுதொடர்பாக தேனப்பன் வெளியிட்டுள்ள கடிதம்: சில மூத்த தயாரிப்பாளர்களுக்கான பென்ஷன் பணத்தை தராமல் நிறுத்திவைத்து அவர்களை கஷ்டப்படுத்துவது, வேலை நிறுத்தத்தின்போது சிலருக்கு மட்டும் சலுகைகள் வழங்கப்பட்டு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்காதது, செயற்குழு ஒப்புதல் இல்லாமல் இன்சூரன்ஸ் காப்பீட்டுத் தொகை 2 லட்சமாக குறைக்கப்பட்டது ஆகியவற்றில் எனக்கு உடன்பாடில்லை.
‘இரும்புத் திரை’ படம் மட்டும் அதிகத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன் கடந்த 9 மாதங்களாக தயாரிப்பாளர் சங்கக் கூட்டங்களில் பங்கேற்பதில்லை. இதனால் ஒட்டு மொத்த தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவுகளும், ஓரிரு நிர்வாகிகளால் தன்னிச்சையாக எடுக்கப்படுவதாக உணர்கிறேன். எனவே என் செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago