திருவள்ளூர், கும்மிடிப்பூண்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன், மடிக்கணினி திருட்டு

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் 20 பவுன் நகை, மடிக்கணினி, 3 செல்போன்கள் திருடப்பட்டுள்ளன.

திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யானந்தம் (36). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

நித்யானந்தம் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டிவிட்டு, தனது தந்தையை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

பின்னர், நேற்று காலை நித்யானந்தம் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 20 பவுன் நகை, அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதேபோல், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து திருச்சியை சேர்ந்த பிரதாப்(21), செந்தமிழ்(22) உட்பட 3 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள், ஆந்திர பகுதியில் உள்ள ஸ்ரீசிட்டி தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு வீடு வீட்டை பூட்டிவிட்டு, காற்றுக்காக மொட்டை மாடியில் உறங்கினர். நேற்று அதிகாலையில் வீட்டுக்குள் வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு மேஜையில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மடிக்கணினி, 3 செல்போன்கள் மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இவ்விரு சம்பவங்கள் குறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள மணவாளநகர், கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

35 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்