மீஞ்சூர் அருகே பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பில் ஈடுபட்ட வழிப்பறி கொள்ளையர்களைத் தடுத்த கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம், பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும், இச்சம்பவத்தில் பெண் உட்பட 2 பேர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (65). இவரது மனைவி விஜயா. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு, வேலூர் கிராமத்துக்கு அருகே உள்ள திருவெள்ளைவாயல் பஜாரில் மளிகைப் பொருட்கள் வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இருவரும் திருவெள்ளைவாயலைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்த 4 மர்ம இளைஞர்கள், தம்பதிகளை வழி மறித்து விஜயா அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்தனர். அவர்களை ஜெயராமன் தடுக்க முயன்றபோது, கொள்ளையர்கள் ஆத்திரத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தம்பதியினரை சரமாரியாக தாக்கினர்.
அப்போது ஜெயராமனும் விஜயாவும் போட்ட சத்தம் கேட்டு அந்த வழியே மோட்டார் சைக்கிளில் சென்ற தேவதானம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (55) என்பவர் வழிப்பறி கொள்ளையர்களைத் தடுத்தார். அவரையும் அந்த கொள்ளை கும்பல் கடுமையாக தாக்கிவிட்டு, விஜயாவிடம் இருந்து பறித்த 10 பவுன் செயினோடு தப்பியோடினர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் படுகாயம் அடைந்த ஜெயராமன், விஜயா மற்றும் ஆறுமுகம் ஆகியோரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு 3 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி ஜெயராமன் உயிரிழந்தார். விஜயா, ஆறுமுகம் ஆகியோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து, காட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வழிப்பறி கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மேலும், திருவெள்ளைவாயல் பகுதிக்கு நேற்று வந்த வடக்குமண்டல டி.ஐ.ஜி., தேன்மொழி, காஞ்சிபுரம் எஸ்.பி., சந்தோஷ் ஹதிமானி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் வழிப்பறி கொள்ளையர்களால் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 mins ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
இந்தியா
58 mins ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
3 hours ago