விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தினகரனை சந்தித்து அவரது அணியில் இணைந்தார்.
தினகரன் அணிக்கு ஆதரவான நிலையை பிரபு எடுத்த பிறகு, அவருக்கு அரசு நிகழ்ச்சிகளுக்கு அதிகாரிகள் அழைப்பிதழ்கள் அனுப்பவதில்லை. இந்நிலையில் தியாகதுருகம் அருகே குடியநல்லூர் கிராமத்தில் உள்ள சேவை மைய கட்டிடத்தில் நேற்று மாலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடைபெற்றது
விழாவில் தொகுதி எம்எல்ஏ வான பிரபுவுக்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுக்காவிட்டாலும் விழாவில் பங்கேற்க உள்ளதாக நேற்று காலை பிரபு அறிவித்தார். இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸார் பிரபுவை சந்தித்து விழா நடக்கும் இடத்துக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்று கூறியதாக தெரிகிறது. இதை ஏற்காத எம்எல்ஏ பிரபு, தனது ஆதரவாளர்களுடன் தியாகதுருகத்தில் மறியலில் ஈடுபட்டார். இதையடுத்து பிரபு மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
53 mins ago
க்ரைம்
51 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
3 hours ago