சென்னையில் வெப்ப அலை பாதிப்பால் வடமாநில கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் வெப்ப அலை பாதிப்பால் வடமாநில கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வயதானோர், குழந்தைகள், நோயாளிகள் வெப்பத்தின் தாக்கத்தால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். வெப்ப அலை வீசி வருவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவும் உடல் நிலை பாதிக்கப்பட்டோருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவும் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிற்ப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 5 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மீஞ்சூர் பகுதியில் கட்டிட வேலை பார்த்து வந்த போது மயங்கி விழுந்த விழுப்புரம் மாவட்ட மேல் மலையனூரை சேர்ந்த வேலு (35), உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சச்சின் (25) ஆகியோர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை சிறப்பு வார்டில் அனுமதிக்கப் பட்டனர். இருவருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சச்சினின் உடல்நிலை மோசமடைந்ததால் நேற்று உயிரிழந்தார்.

கடுமையான வெப்ப அலை பாதிப்பால் வடமாநில கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு கட்டிடத் தொழிலாளி வேலு நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

31 mins ago

சினிமா

56 mins ago

இணைப்பிதழ்கள்

57 mins ago

வணிகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

மாவட்டங்கள்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்