ஓடும் ரயிலில் ரூ.13 லட்சம் நகை கொள்ளை

By செய்திப்பிரிவு

உயர் நீதிமன்ற வழக்கறிஞரிடம் ஓடும் ரயிலில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகை கள் கொள்ளையடிக்கப்பட்டன.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஜீவா. உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவர் தனது உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக செகந்திராபாத் சென்றிருந்தார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு குடும்பத்துடன் நேற்று முன்தினம் இரவு 7.15 மணிக்கு சார்மினார் ரயிலில் சென்னை திரும்பினார்.

ரயிலில் இரவு அனைவரும் தூங்கிவிட்டனர். நேற்று காலை 6 மணிக்கு எழுந்து பார்த்தபோது, ஜீவாவின் பை காணாமல் போயிருந்தது. அதில், ரூ.13 லட்சம் மதிப்புள்ள 37 பவுன் நகைகள், வைர கம்மல், வைர மோதிரம் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளன. இதுகுறித்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஜீவா புகார் தெரிவித்துள்ளார். போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்