பிரதமர் மோடிக்கு எதிராக #GoBackModi ட்விட்டர் டிரெண்டிங்குக்கு காங்கிரஸும், ரம்யாவுமே காரணம் என்று காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும் கருப்புச் சட்டை அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்தும் அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் உலகளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.
இதுகுறித்து நடன இயக்குனரரும், பாஜக உறுப்பினருமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், “மோடி நமக்கு உதவில்லை என்றால்? வேறு யார் நமக்கு உதவுவார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விருந்து நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார்.
காங்கிரஸும், ரம்யாவுமே போலியான போராட்டக்காரர்களை விலைக்கு வாங்கி மோடிக்கு எதிராக பதிவிட வைக்கிறார்கள். ரம்யா, ராகுலின் சிறந்த நண்பர். அவர்தான் காங்கிரஸின் சமூக வலைதளங்களை கையாள்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
37 mins ago
விளையாட்டு
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
சினிமா
3 hours ago
க்ரைம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
3 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago