தமிழகத்தில் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (மார்ச் 27) முதல் வரும் 30-ம் தேதி வரை 4 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 30-ம் தேதி வரை 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மார்ச் 31 மற்றும் ஏப்.1-ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மார்ச் 27 (இன்று) முதல் வரும் 30-ம் தேதி வரை 4 நாட்களுக்கு 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

7 mins ago

உலகம்

11 mins ago

தமிழகம்

59 mins ago

க்ரைம்

1 hour ago

வெற்றிக் கொடி

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்