தமிழக நலனுக்காக தை வெள்ளிக்கிழமை (பிப்.9) மாலை வீடுதோறும் விளக்கேற்றி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று பொதுமக்களை இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
திருச்செந்தூர் முருகன் கோயில் சுற்று மண்டபம் இடிந்து விழுந்து ஒரு பெண் காலமானதும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதும் பக்தர்களின் மனதை பெரிய அளவில் பாதித்துள்ளது. இறைவன் வாழும் இல்லங்களான கோயில்களில் ஏற்பட்டுள்ள இதுபோன்ற அசம்பாவிதங்களால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதே ஆன்மிகப் பெரியோரின் கருத்தாக இருக்கிறது.
இதுபோன்ற நேரத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதே சிறந்த வழியாகும். எனவே, தை வெள்ளியான பிப்.9-ம் தேதி (நாளை) மாலை அனைத்து இந்துக்களின் வீட்டு வாசல்களிலும் கோலமிட்டு, வீட்டு முன்பு தீபம் ஏற்றி அன்னை மீனாட்சியையும், திருச்செந்தூர் முருகப் பெருமானையும் தமிழக நலனுக்காக வேண்டுவோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
14 mins ago
சினிமா
22 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
9 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
11 hours ago