குன்றத்தூரில் கணவன் கண் முன்னே பெண்ணிடம் நகை பறித்து தப்பிச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த கூட்டாளியும் பிடிபட்டார்.
பூந்தமல்லி, குன்றத்தூரை அடுத்த ராகவேந்திரா நகர், கம்பர் தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார் (63). இவரது மனைவி ஜெயஸ்ரீ (57). இருவரும் கடந்த சனிக்கிழமை அருகில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது மிகச் சாதாரணமாக கணவர் முன்னிலையில் ஜெயஸ்ரீயின் கழுத்திலிருந்த செயினை இளைஞர் ஒருவர் பிடுங்கி தப்பி ஓடி மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றார்.
செயின் பறிப்பில் நிலைகுலைந்து போன ஜெயஸ்ரீ சாலையில் விழுந்து காயமடைந்தார். கொள்ளையனைப் பிடிக்க முயன்ற அசோக்குமாரும் கீழே விழுந்து காயமடைந்தார். செயின் பறிப்பு காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி இருந்தது.
இது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து குன்றத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கேமரா காட்சிகளை வைத்து நகை பறிப்பில் ஈடுபட்ட பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர், பகுதியை சேர்ந்த சிவா (19) என்பவரை கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டியது கூட்டாளி அதே பகுதியைச் சேர்ந்த சாலமன் (23) தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடி வந்த நிலையில் கூடுவாஞ்சேரியில் வைத்து சாலமன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
21 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
4 hours ago