தேனி: தேனி மக்களவை தொகுதி யில் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை அமமுக கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக தேர்தல் அலுவலகம், அவர் தங்குவதற்கான பங்களா போன்றவை தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.
தேனி மக்களவைத் தொகுதி ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் மற்றும் மதுரை மாவட்டத்தின் சோழவந்தான் ( தனி ), உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது. பல கட்சிகளில் கூட்டணி முடிவாகாததாலும், தொகுதி ஒதுக்கீடு செய்யாததாலும் தேனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் உறுதிப்படுத்தாத நிலை உள்ளது.
ஆனால், தேனி தொகுதி எம்பி ரவீந்திர நாத் இங்கு மீண்டும் போட்டியிட முயற்சித்து வருகிறார். இந்நிலையில் பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மற்றும் அமமுக கட்சி உள்ளதால் இருவரில் ஒருவருக்கே தேனி தொகுதி ஒதுக்கப்படும் நிலை உள்ளது.
இதற்கு இருதரப் பினரும் முயற்சித்து வரும் நிலையில் தற்போது அமமுக சார்பில் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்காக தொகுதி முழுவதும் தேர்தல் பணியில் அக்கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். கட்சி அலுவலகங்கள், தேர்தல் பணிக்கான பங்களாக்கள், வீடு கள் உள்ளிட்டவற்றை தேர்வு செய் வதற்கான பணி நடந்து வருகிறது.
இது குறித்து அமமுகவினர் கூறியதாவது: தேனி தொகுதியில் டி.டி.வி.தினகரனுக்கு நல்ல அறிமுகம் உண்டு. 1999-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். 2004-ம் ஆண்டிலும் இங்கு போட்டியிட்டுள்ளார். இவர் சார்ந்த சமுதாய வாக்குகளும் அதிகம். அதனால் இங்கு போட்டியிட வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இருப்பினும் அதிகாரப் பூர்வ அறிவிப்புக்கு பிறகே வேட்பாளர் விவரம் தெரியவரும் என்று கூறினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
விளையாட்டு
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
சினிமா
3 hours ago
தமிழகம்
4 hours ago