தாம்பரம் - கடற்கரை வழித்தடத்தில் இன்று 150 பேருந்துகளை கூடுதலாக இயக்க நடவடிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: தாம்பரம் - கடற்கரை இடையே இன்று மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த வழித் தடத்தில் 150 கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்கு வரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரம் - கோடம்பாக்கம் ரயில் வழித் தடத்தில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், இன்று காலை 10 முதல் பிற்பகல் 3.30 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எனவே, இந்த வழித் தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி தாம்பரம், கிண்டி, தியாகராய நகர், சென்ட்ரல் மற்றும் சென்னை கடற்கரை வரை உள்ள வழித் தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகளை இயக்க மாநகர போக்கு வரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் அதிகாரிகளை நியமித்து பேருந்துகள் இயக்கம் கண்காணிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்