ஊழல் புகாரில் கைதான கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியின் ஜாமீன் மனுவை கோவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி வழங்க ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய போது, அப்பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை லஞ்சத் ஒழிப்புத்துறை காவல் பிரிவினர் கையும் களவுமாக கைது செய்தனர். அவருக்கு உதவியதாக பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இருவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த ஜாமீன் மனுவை கோவை நீதிமமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், கணபதியை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு கோவை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்திருந்ததனர். 5 நாள் போலீஸ் காவல் தொடர்பான வழக்கு விசாரணை பிப்.,12க்கு ஒத்திவைக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
3 hours ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
2 hours ago
சினிமா
5 hours ago
வாழ்வியல்
51 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago