இந்தியாவில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி நீட் தேர்வில் தகுதிபெறும் மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்ந்து படிக்கின்றனர். இங்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்காதவர்கள் சீனா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்கின்றனர்.
வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில் பணிபுரிய வேண்டும் என்றால் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வை (Foreign Medical Graduates Examina tion - FMGE) எழுத வேண்டும். இந்நிலையில் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்பவர் களுக்கும் கட்டாயம் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற நடைமுறையை கொண்டுவர இந்திய மருத்துவ கவுன்சில் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக டாக்டர்கள் கூறும்போது, “வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கு நடத்தும் தேர்வு மிகவும் கடினமாக இருக்கும். அந்த தேர் வில் 10 % பேர்கூட தேர்வு பெறுவதில்லை. வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்கச் செல்பவர்களுக்கு நீட் தேர்வு நடத்துவது நல்லதுதான். அதேநேரத்தில் இந் திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
விளையாட்டு
10 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
12 hours ago
விளையாட்டு
13 hours ago