வழக்கமாகப் பிரதமர் மோடிதான், ‘மனதின் குர’லை வானொலி மூலமாக மக்களிடம் பகிர்ந்துகொள்வார். ஆனால், பிப்ரவரி 3 அன்று, ‘பிரதமர் மோடிக்கு லடாக் மக்களின் (இறுதி) மனதின் குரல்’ என்னும் தலைப்பில் ஒரு காணொளி வெளியானது. சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக் பேசியிருந்த அந்தக் காணொளியில், பிப்ரவரி 3 அன்று, லே பகுதியில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தின் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டக்கூறு 2019இல் ரத்துசெய்யப்பட்டு, அம்மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதைக் கண்டித்து, காஷ்மீர் அரசியல் கட்சிகள் இன்றைக்கும் போராடிவரும் நிலையில், ஆரம்பத்தில் இந்நடவடிக்கையை வரவேற்ற லடாக் மக்கள் - கடந்த சில ஆண்டுகளாகவே அதிருப்தியில் உள்ளனர். அரசமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்ட வணையின்கீழ் லடாக்கைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி அவ்வப்போது போராட்டம் நடத்துகின்றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
12 mins ago
இந்தியா
33 mins ago
விளையாட்டு
46 mins ago
சினிமா
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
இந்தியா
9 hours ago
வாழ்வியல்
10 hours ago
இந்தியா
11 hours ago
விளையாட்டு
12 hours ago