போலீஸிடம் பிரபாகரன் முரண்பட்ட தகவல்கள்

By செய்திப்பிரிவு

பிரபாகரனின் வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

வாழ்வில் பணக்காரனாகி பங்களாவில் குடியேற வேண்டும். சொகுசு காரில் வலம் வரவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. ஹோட்டல் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. இதனால், வேறு வழியில் விரைவில் பணம் சம்பாதிக்க யோசனை செய்தேன். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் என நண்பர்கள் யோசனை தெரிவித்தனர். தந்தையிடம் பணம் பெற்று பெரும் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்தேன். ஆனால், பெரும் இழப்புதான் ஏற்பட்டது. இதை என்னால் சரிகட்டவே முடியவில்லை. இதனால், என்ன செய்வது என யோசித்தேன்.

தீபாவிடம் அதிக பணம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்தனர். இதனால், தீபாவிடம் இருந்து பணத்தை எப்படி பறிப்பது என யோசித்தேன். அப்போதுதான் வருமானவரி அதிகாரிபோல் நடித்து பணம் பறிக்கலாம் என திட்டமிட்டேன். இதற்கான போலி அடையாள அட்டை தயாரிக்க எனது தந்தை, சகோதரி உதவி புரிந்தனர். வருமானவரித்துறை அதிகாரிபோல் தீபா வீட்டில் நடித்தபோது வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் திரண்டதால் ஓட்டம் பிடித்தேன். இவ்வாறு வாக்குமூலத்தில் பிரபாகரன் தெரிவித்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரபாகரன் தான் வெளியிட்ட வீடியோ பதிவில் ஒருவிதமாகவும், போலீஸாரிடம் அளித்த வாக்குமூலம் வேறு விதமாகவும் உள்ளதாக கூறப்படுகிறது. முரண்பட்ட தகவல்களை வெளியிட்டுள்ளதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். மேலும் பிரபாகரனின் தந்தை, சகோதரியை கைது செய்வது குறித்தும் போலீஸார் ஆலோசித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

59 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்