அம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:

அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் இரு சக்கர வாகனம் வாங்க விரும்புவோர், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் பிப்ரவரி 5-ம் தேதிக்குள் அதே மண்டல அலுவலகங்களில் அளிக்கலாம்.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள், 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராகவும், ஓட்டுநர் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25 ஆயிரம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். வங்கிக் கடன் மூலமாகவும் வாகனம் வாங்கலாம்.

125 சிசிக்கு குறைவான வாகனத்தையே வாங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான இருசக்கர வாகனங்களும் வாங்கலாம். பயனாளியின் தனி ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஓடிடி களம்

8 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்