திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியது:
பயிர்க் காப்பீடு செய்தவர்களுக்கான இழப்பீட்டுத் தொகைக்கான நிதியை மத்திய அரசு வழங்கிவிட்டது. ஆனால், முழுமையாக விவசாயிகளுக்கு வழங்கவில்லை என கூறப்படுகிறது. பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகள் பட்டியலையும், இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்ட பயனாளிகள் பட்டியலையும் தமிழக அரசு வெளிப்படையாக வெளியிட்டால் இந்த பிரச்சினை எழாது. பயனாளிகள் பட்டியலை தமிழக அரசு வெளியிட வேண்டும். ஒக்கி புயலால் உயிரிழந்த 16 மீனவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் தரப்பட்டுள்ளது. கடலில் காணாமல் போனால் 7 ஆண்டுகள் கழித்து அவர்களுடைய குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்கும் நடைமுறை தற்போது இரண்டரை ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
6 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
சினிமா
2 hours ago
உலகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago