சென்னையில் 2 இடங்களில் இருவர் கொலை

By செய்திப்பிரிவு

சென்னையில் இரு இடங்களில் அடுத்தடுத்து 2 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

சென்னை ஐசிஎப் கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ். தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்துள்ளார். இவர், நேற்று காலை நியூஆவடி சாலை அருகே கத்தி யால் குத்தப்பட்டு இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த ஐசிஎப் போலீஸார் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நண்பர் கைது

கொலை தொடர்பாக பிரகாஷின் நண்பரும், அதே பகுதி யைச் சேர்ந்தவருமான சூர்யா என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “பிரகாஷும், சூர்யாவும் நண்பர்களாக இருந்துள்ளனர். இரு வாரங்களுக்கு முன்பு சீட்டு விளையாடும்போது இருவருக்கும் மோதல் ஏற்பட்டு விரோதமாக மாறியுள்ளது. அப்போது, பிரகாஷ் சூர்யாவைத் தாக்கியுள்ளார். இதை மனதில் வைத்திருந்த சூர்யா நேற்று முன்தினம் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவோம் என வீட்டில் இருந்தவரைத் தனி யாக அழைத்துச் சென்று கத்தியால் குத்தி கொலை செய் துள்ளார்” என்றனர்.

மற்றொரு கொலை

அண்ணா நகர் அடுத்த சத்யா நகரில் உள்ள மைதானம் ஒன்றில் நேற்று காலை 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் இறந்து கிடந் தார். சடலத்தை கைப்பற்றிய போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளியைத் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

இந்தியா

44 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்