போயஸ் இல்லத்தில் பாதாள அறை உள்ளதா?- பதிலளிக்காமல் சென்ற ஆட்சியர்

By செய்திப்பிரிவு

போயஸ் இல்லம் அரசு இல்லமாக்கும் முயற்சியில் ஆய்வு நடந்து நான்கு மாதத்தில் பணி நிறையும் என்று தெரிவித்த ஆட்சியர் பாதாள அறை உள்ளதா என்ற கேள்விக்கு ஆட்சியர் பதிலளிக்காமல் சென்றார்.

போயஸ் இல்லத்தை அரசுடமையாக்க ஆய்வுப்பணிகள் ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் நடந்து வருகிறது. ஆய்வுப்பணிகள் குறித்த கேள்விக்கு ஆட்சியர் இன்று பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இன்றைய தேதியில் முன்னாள் முதல்வரின் நேரடி வாரிசு யாரும் இல்லை. நாங்கள் நிலம் கையகப்படுத்தி நாங்கள் ஆய்வு பணிகள் முடிந்து பப்ளிக் நோட்டீஸ் கொடுப்போம். அப்போது யாராவது உரிமை கோரினால் ஆட்சேபனையோ, கருத்தோ இருந்தால் தெரிவித்துக்கொள்ளலாம்”. என்று கூறினார்.

உயர்நீதிமன்றம் மூலம் வாரிசு என்று அறிவிக்கப்பட்டு யார் ஆட்சேபனை தெரிவித்தாலும் அதைப் பொறுத்து தங்கள் நடவடிக்கை அமையும், நிலம் கையகப்படுத்தியது அரசு இல்லமாக மாற்றத்தான். நான்கு மாதங்களில் அந்த பணி நிறைவு பெறும் என்று தெரிவித்தார்.

வருமான வரித்துறை தங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறது. அவர்கள் ஆய்வு செய்வதால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தார்.

போயஸ் தோட்டத்தில் பாதாள இருப்பதாக சொல்கிறார்கள்? ஆய்வு செய்தபோது அப்படி அறை எதாவது இருந்ததா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்காமல் உடனடியாக ஆட்சியர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

40 mins ago

ஜோதிடம்

56 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்