மேட்டூர்/தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. எனினும், மேட்டூர் அணை நீர்மட்டம் 53.32 அடியாக உயர்ந்துள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் கடந்த 29-ம் தேதி முதல்நீர்வரத்து விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தது. நேற்று காலை அளவீட்டின்போது நீர்வரத்து மேலும் குறைந்து, விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக இருந்தது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 2,227 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1,845 கனஅடியாக குறைந்தது. குடிநீர் தேவைக்காக மட்டும் அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட நீர்வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போதுஅணை நீர்மட்டம் 53.32 அடி, நீர்இருப்பு 19.96 டிஎம்சி.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
15 mins ago
இந்தியா
15 mins ago
தமிழகம்
40 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
கல்வி
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago