வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே நேற்று காலை உயர்மட்ட மின்சார கேபிள் அறுந்து விழுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் கடந்த 2 மாதங்களாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக பகலில் ரயில் சேவை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே உயர்மட்ட மின்சார கேபிள் அறுந்து விழுந்தது. இதனால், புறநகர் மின்சார ரயில்கள் வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ரயில் சேவை ஒருமணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் சேதம் அடைந்த மின்சார கேபிளை சரி செய்த பின்னரே ரயில்கள் இயக்கப்பட்டன. இதன் காரணமாக நேற்று அந்த மார்க்கத்தில் சென்ற ரயில் பயணிகள் அவதிப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
தமிழகம்
4 hours ago
சுற்றுலா
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
தமிழகம்
5 hours ago