காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது

By செய்திப்பிரிவு

திருமாவளவனுக்கு மிரட்டல் விடுத்தவரை கைது செய்ய வலியுறுத்தி காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் தலையைக் கொண்டுவந்தால் ரூ.1 கோடி பரிசு என அறிவித்த கோபிநாத் என்பவரை கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி காவல் ஆணையர் அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ரா.செல்வம் தலைமையில் 30 பேர் நேற்று மாலை முற்றுகையிட்டனர். அவர்களை வேப்பேரி போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து, ரா.செல்வம் கூறும்போது, “தொல்.திருமாவளவனின் பேச்சின் முன் பகுதி மற்றும் பின் பகுதியை நீக்கம் செய்து, அவர் இந்து கோயில்களை இடிக்கச் சொன்னதாக தவறாக புரிந்துகொண்டு கோபிநாத் போன்றவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்களை கைது செய்ய வேண்டும்” என்றார்.

விஷ்வ இந்து பரிஷத் புகார்

இந்நிலையில், பொதுக் கூட்டத்தில் வன்முறையை தூண்டக்கூடிய வகையில் பேசியதற்காக தொல்.திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் (தமிழ்நாடு) அமைப்பின் சென்னை மாவட்ட தலைவர் ஏ.ஆர்.ரவி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

39 mins ago

கல்வி

32 mins ago

இந்தியா

29 mins ago

தமிழகம்

35 mins ago

ஓடிடி களம்

42 mins ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்