ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் பிரச்சாரம் மற்றும் மெட்ரோ ரயில் பணிகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வடசென்னையில் மாநகர பேருந்துகளின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதனால் அப்பகுதியில் தற்போது தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதேபோல் மெட்ரோ ரயில் பணிகளும் நடந்துக் கொண்டிருக்கிறதால், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், கொருக்குபேட்டை, தண்டையார்பேட்டை பகுதிகளின் வழியாக செல்லும் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், மாநகர பேருந்துகளின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறும்போது, “சென்ட்ரலில் இருந்து கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை வழியாக திருவொற்றியூர் செல்லும் சாலைகளில் கடந்த சில நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ஆங்காங்கே பேருந்துகள் நீண்ட நேரத்துக்கு நிற்கின்றன. பொதுமக்களும் பேருந்துகளுக்காக மணி கணக் கில் காத்திருக்கின்றனர்.’’ என்றனர்.
ஓட்டுநர்களிடம் இதுபற்றி கேட்டபோது, ‘‘பிராட்வேயில் இருந்து தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், மணலி செல்லும் சாலைகளின் ஓரமாக வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளன.
மெட்ரோ ரயில் பணியால் ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல் இருந்து வந்தது.
தற்போது, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், நெரி சல் மேலும் அதிகரித்துள்ளது’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
37 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
4 hours ago
ஆன்மிகம்
3 hours ago
கருத்துப் பேழை
4 hours ago