ஆளுங்கட்சியினரின் பணப் பட்டுவாடா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விழிப்போடு செயல்பட்டு ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் தொடர்பாக பிரச்சினை எழுந்தபோது, தேர்தல் அதிகாரி என்ன தவறு செய்துள்ளார் என்பதை கண்டறிந்து அதற்குரிய நடவடிக்கையை தலைமைத் தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதனை வலியுறுத்தினார்கள். இன்றுகூட திமுக அமைப்புச் செயலாளர் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி புகார் மனு கொடுத்தார். இந்நிலையில், தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
ஆளுங்கட்சியினரின் பணப் பட்டுவாடா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இன்னும் விழிப்போடு இருந்து தேர்தலை நடத்துவதற்கு எல்லா வகையிலும் துணை நிற்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago