கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: 230 சாட்சிகளிடம் விசாரணை முடிந்தது

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் செயல்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் கடந்த 2004-ல் நடைபெற்ற தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். பல குழந்தைகள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

இந்த தீ விபத்து தொடர்பான வழக்கு விசாரணை தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முகமது அலி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமையுடன் எதிரிகள் தரப்பு வழக்கறிஞர்களின் வாதம் முடிவடைந்தது. இதுவரை பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவர்களின் பெற்றோர் மற்றும் சாட்சிகள் என 230 பேர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 562 சான்றாதாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை முதல் அரசுத் தரப்பு வாதம் தொடங்கியது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் மதுசூதனன் ஆஜரானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

மேலும்