ஆர்.கே.நகரில் ஊழல் வெற்றி பெறும்; ஜனநாயகம் தோற்கும்: ராமதாஸ் கருத்து

By செய்திப்பிரிவு

ஆர்.கே.நகரில் ஊழல் வெற்றி பெறும்; ஜனநாயகம் தோற்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழக அரசியலில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 6-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், டிடிவி தினகரன் 29,267 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ''ஏற்கெனவே கூறியதைப் போன்று ஜனநாயகத்தை பணநாயகம் விழுங்கத் தொடங்கியிருக்கிறது. இது தமிழக மக்கள் எதிர்பார்த்ததுதான். ஊழல் வெற்றி பெறும், ஜனநாயகம் தோற்கும். பணநாயகம் வெற்றிபெறும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

தமிழக மக்கள் விவரம் அறிந்தவர்கள். ஊழலுக்கு எதிரானவர்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒரு தேர்தலாகவே பார்க்க மாட்டார்கள். நாங்கள் இதை ஒரு தேர்தலாகப் பார்க்கவில்லை. இடைத்தேர்தல் என்றாலே மக்களுக்கு தீபாவளிக் கொண்டாட்டம்தான்.

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் தொடர்ந்து இழந்து கொண்டிருக்கிறார்கள்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்