திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள மேட்டுப்பாளையத்திலிருந்து சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரஜினி அரசியல் வருகை குறித்து தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்ததையடுத்து செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது:
“ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் அரசியலுக்கு வரும் உரிமை உள்ளது. நடிகர் ரஜினிகாந்து என்ன பேசியிருக்கிறார் என்ற முழுவிவரம் எனக்குத் தெரியவில்லை. அவரது பேச்சைக் கேட்ட பிறகே கருத்து கூற முடியும்” என்றார்.
சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியது பற்றி முதல்வரிடம் கேள்வி எழுப்பிய போது, “இது அவரது தனிப்பட்ட கருத்து. இப்போதுதான் அவர் அரசியலுக்கு வருவதாகத் தெரிவித்திருக்கிறார். 2021-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய அதிமுக இன்று உயிரோட்டமாக இருக்கிறது. அதிமுகவை வெல்ல யாரும் பிறந்ததுமில்லை, பிறக்கப்போவதுமில்லை” என்றார் எடப்பாடி பழனிசாமி.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
விளையாட்டு
16 mins ago
இந்தியா
39 mins ago
கல்வி
47 mins ago
இந்தியா
50 mins ago
க்ரைம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இலக்கியம்
7 hours ago