ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னைவாழ் குமரி மக்கள் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். எச்.வசந்தகுமார் எம்எல்ஏ தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதுதொடர்பாக சென்னை வாழ் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளரும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான எச்.வசந்தகுமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
கண்டிராத பேரழிவு
ஒக்கி புயல் தாக்கியதில் கன்னியாகுமரி மாவட்டம் இதுவரை கண்டிராத அளவுக்கு பேரழிவை சந்தித்துள்ளது. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் புயலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் மாயமாகியுள்ளனர். மேலும், புயல் காற்றால் தென்னை, வாழை, ரப்பர், தேக்கு உள்ளிட்ட பல்வேறு வகை மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி சென்னையில் உள்ள 20-க் கும் மேற்பட்ட சென்னை வாழ் கன்னியாகுமரி மக்களின் நலச்சங்கங்கள் இணைந்து வள்ளுவர் கோட்டம் அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
அந்த ஆர்ப்பாட்டத்தின்போது, கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி தரவேண்டும், மீன்பிடி படகுகளை பழுது நீக்கவும் புதிய கருவிகள் வாங்கவும் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.
நிவாரண உதவி
நெல், வாழை பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், ரப்பர், பலா, தென்னை, பாக்கு போன்ற மரங்களை பயிரிட்ட விவசாயிகளுக்கு சேத பாதிப்புக்கு ஏற்றவகையிலும் நிவாரண உதவி வழங்க வேண்டும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலிய யுறுத்த உள்ளோம் என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
இந்தியா
25 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
1 hour ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago