ரவுடியை கொன்றவர்களை பிடிக்க போலீஸார் தீவிரம்

By செய்திப்பிரிவு

திருவல்லிக்கேணியில் ரவுடியை கல்லால் அடித்து கொலை செய்த கும்பலை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை திருவல்லிக்கேணி கெனால் தெரு சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு, தலை நசுங்கிய நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அண்ணா சதுக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் கண்ணகி நகரைச் சேர்ந்த குமார் (30) என்பது தெரியவந்தது. இவர் மீது கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி வழக்குகள் உள்ளன. குமார், திருவல்லிக்கேணியில் பாரதி நகரில் வசித்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த விஜய் என்ற மற்றொரு ரவுடிக்கும், குமாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, குமார் கண்ணகி நகருக்கு வீட்டை மாற்றிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் நண்பர்களை பார்க்க நேற்று முன்தினம் இரவில் திருவல்லிக்கேணிக்கு வந்த குமாரை, விஜய் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ஓட ஓட விரட்டி கல்லால் தாக்கியுள்ளனர்.

ஓரிடத்தில் கீழே விழுந்த குமாரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பியுள்ளனர். இதை அதே பகுதியை சேர்ந்த பலர் நேரில் பார்த்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையில் தொடர்புடையவர்கள் எனக்கூறி பிரவீன், ஹரி என 2 பேரை போலீஸார் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்