நண்பர் மூலம் அன்புச்செழியனை தேடும் பணி தீவிரம்

By செய்திப்பிரிவு

திரைப்பட நடிகரும், இயக்குநருமான சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் (43). இணை தயாரிப்பாளரான இவர், கடந்த வாரம் வளசரவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் எழுதிய கடிதத்தில், சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் பற்றி குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அசோக்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக அன்புச்செழியன் மீது போலீஸார் வழக்கு பதிந்தனர். இதைத்தொடர்ந்து அன்புச்செழியன் தலைமறைவானார்.

இந்த வழக்கு தொடர்பாக, சசிகுமாரிடம் வளசரவாக்கம் போலீஸார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில், அன்புச்செழியனுக்கு எதிராக பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மீதான பிடியை போலீஸார் இறுக்கியுள்ளனர். அண்டை மாநிலங்களிலும் போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் அன்புச் செழியனின் நெருங்கிய நண்பராக கருதப்படும் முத்துக்குமார் என்பவரிடம் தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர். முத்துக்குமார் சென்னை ஜாபர்கான் பேட்டையில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். தொழில் ரீதியில் இருவருக்கும் நல்ல அறிமுகம் உண்டு என்பதால் அன்புச் செழியனை பிடிக்க ஏதேனும் துப்புக் கிடைக்குமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்