இளம்பெண் கொலை: ஆதம்பாக்கம் காவல் நிலையம் முற்றுகை

By செய்திப்பிரிவு

ஆதம்பாக்கத்தில் பெண் இன்ஜினீயர் கொலை வழக்கில் கைதான இளைஞர் மீது கடுமையான சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினீயர் இந்துஜாவும், வேளச்சேரியை சேர்ந்த ஆகாஷ் என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் ஆகாஷின் நடவடிக்கை சரியில்லாததால், அவரை திருமணம் செய்ய இந்துஜா மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ், கடந்த திங்கள்கிழமை இரவு இந்துஜாவை தீ வைத்து எரித்துக் கொலை செய்தார். இந்த சம்பவத்தில் இந்துஜாவின் தாய் ரேணுகா, தங்கை நிவேதா ஆகியோரும் படுகாயமடைந்தனர். இந்துஜாவின் கொலை தொடர்பாக ஆதம்பாக்கம் போலீஸார் வழக்குபதிவு செய்து ஆகாஷை கைது செய்தனர்.

இந்நிலையில் ஆகாஷ் மீது கடுமையான சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்துஜாவின் உறவினர்கள் நேற்று காலை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் உறுதியளித்ததால், அவர்கள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

உலகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்