புதிதாக கட்டிய வீட்டின் சுவர்களில் நீர் கசிவு, வெடிப்பு ஏற்பட்டதால் அந்த வீட்டை கட்டிய கட்டுமான நிறுவனம் பழுதை சரிசெய்ய வாடிக்கையாளருக்கு ரூ.5.83 லட்சம் வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட (தெற்கு) நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் ஆலம்பாறை கிராமத்தைச் சேர்ந்த தேவிகிருஷ் ணன் என்கிற டவ்முனி டே துரை சாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
நான் எனது இடத்தில் வீடு கட்டுவதற்காக ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துகொண்டேன். அதன்பிறகு அந்த நிறுவனத்தினர் கட்டுமான பணியை மேற்கொண்டனர். பணிகள் முடிந்தபிறகு, மொத் தம் ரூ.45 லட்சம் செலுத்தினேன்.
பின்னர், கடந்த 2009 அக்டோபரில் வீட்டை ஒப்படைத்தனர். வீட்டில் குடியேறிய பிறகு வீட்டின் குளியல் அறை, உணவருந்தும் அறை மற்றும் சுவர்கள் ஈரப்பதமாக இருந்தன. சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டதோடு, நீர் கசிந்தது. அதோடு, செப்டிக் டாங்கும் சரியாக கட்டப்படவில்லை. இதுதொடர்பாக கட்டு மான நிறுவனத்துக்கு கடந்த 2011 மே 6-ம் தேதி நோட்டீஸ் அனுப்பினேன். எந்தவித பதிலுமில்லை. எனவே, அந்த நிறுவனத்தின் சேவை குறைபாடு, எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ் வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட (தெற்கு) நுகர்வோர் குறைதீர்மன்றத்தின் தலைவர் எம்.மோனி, உறுப்பினர்கள் கே.அமலா, டி.பால் ராஜசேகரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் கட்டிடத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் பழுதுகள் குறித்து நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையர் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளார். ஆனால், கட்டுமான நிறுவனம் தங்கள் தரப்பில் குறைபாடு இல்லை என்பதை நிரூபிக்கவில்லை. எனவே, பழுதுகளைச் சரிசெய்ய செலவாகும் தொகை யான ரூ.5.83 லட்சத்தை மனுதாரருக்கு கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும். அதோடு, மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.25,000, வழக்கு செலவாக ரூ.5 ஆயிரத்தையும் வழங்க வேண் டும் என்று உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
5 hours ago
வணிகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
தொழில்நுட்பம்
7 hours ago
சினிமா
8 hours ago
க்ரைம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago