குழந்தைகளே உலகின் எதிர்காலம்: டிடிவி தினகரன் வாழ்த்து

By செய்திப்பிரிவு

உலகின் எதிர்காலமும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமும் குழந்தைகளே என்று அதிமுக அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14, இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், ''உலகின் எதிர்காலமும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமும் குழந்தைகளே. குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியையும் மகிழ்ச்சியான மனநிலையையும் எல்லா நேரத்திலும் நாம் உறுதி செய்திட வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில், உண்மை எது, பொய் எது என்பதை குழந்தைகள் பிரித்துணர்ந்து செயலாற்றிட பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து வழி நடத்திட வேண்டும். குழந்தைச் செல்வங்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

தமிழகம்

50 mins ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஓடிடி களம்

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்