உலகின் எதிர்காலமும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமும் குழந்தைகளே என்று அதிமுக அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14, இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், ''உலகின் எதிர்காலமும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமும் குழந்தைகளே. குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியையும் மகிழ்ச்சியான மனநிலையையும் எல்லா நேரத்திலும் நாம் உறுதி செய்திட வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில், உண்மை எது, பொய் எது என்பதை குழந்தைகள் பிரித்துணர்ந்து செயலாற்றிட பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து வழி நடத்திட வேண்டும். குழந்தைச் செல்வங்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 mins ago
தமிழகம்
50 mins ago
விளையாட்டு
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
4 hours ago
ஓடிடி களம்
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
தமிழகம்
5 hours ago