கமல்ஹாசனுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் சு.ஆ. பொன்னுசாமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு: கமல்ஹாசன் குறித்து சமூக வலைதளங்களில் இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவதூறுகளைப் பரப்புகின்றனர்.
அகில பாரத இந்து மகா சபாவின் தேசிய துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா பேட்டியளிக்கும்போது, “கமல்ஹாசனை சுட்டுக் கொல்ல வேண்டும். அவரைப் போன்றோர் இந்த புனித பூமியில் வாழத் தகுதியற்றவர்கள். எனவே, அவரை தூக்கில்போட வேண்டும்” என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த மிரட்டல் இந்திய ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட மிரட்டலாகும். எனவே, கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த பண்டிட் அசோக் சர்மா மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். கமல்ஹாசனுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
ஜோதிடம்
13 hours ago