ஆர்.கே.நகர் இடைதேர்தல்: காவல் அதிகாரிகளை மாற்ற கோரிக்கை

By செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து காவல்துறை அதிகாரிகளை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வலுத்து வருகிறது.

கடந்த முறை ஆர்.கே.நகர் தேர்தல் நடந்தபோது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா புகார் எழுந்தது. இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகளையும் மாற்றவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து அப்போதைய சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்(வடக்கு) சாரங்கன், இணை ஆணையர் வடக்கு காவல் ஆணையர் ஜோஷி நிர்மல் குமார், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் ஜெயகுமார் மற்றும் ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை, திருவொற்றியூர் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் மொத்தமாக மாற்றப்பட்டனர்.

தற்போது மீண்டும் ஆர்.கே.நகர் இடைதேர்தல் நடப்பதை ஒட்டி காவல் உயர் அதிகாரிகளை மாற்றும் கோரிக்கை எழுந்துள்ளது. காவல் அதிகாரிகளை தேர்தல் நேரத்தில் மாற்றுவது வழக்கமான நடைமுறை என்றாலும், தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் கடந்த முறை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டவர்கள் ஆகவே மாற்றும் வாய்ப்பு குறைவு என காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

21 mins ago

இந்தியா

36 mins ago

ஆன்மிகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

மேலும்