ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான தாக்குதல் வருத்தமளிக்கிறது: தமிழிசை சவுந்தரராஜன்

By செய்திப்பிரிவு

ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான தாக்குதல் வருத்தமளிக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

ஐந்து நாள் வேலை நிறுத்தத்துக்குப் பிறகு, கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான தாக்குதல் வருத்தமளிக்கிறது, துறையை தொடர்பு கொண்டுள்ளேன். மீனவர்களின் பாதுகாப்பில் மத்திய அரசும் பாஐகவும் அக்கறையோடு உள்ளன'' என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

25 mins ago

விளையாட்டு

52 mins ago

விளையாட்டு

54 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்