ஸ்ட்ரெச்சரை சங்கிலியால் பிணைத்து வைக்கும் ஸ்டான்லி மருத்துவமனை ஊழியர்கள்: சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்ட இளம்பெண் அவதி

By செய்திப்பிரிவு

ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை அழைத்துச்செல்லும் ஸ்ட்ரெச்சர் மற்றும் தள்ளுவண்டிகளை, மருத்துவமனை ஊழியர்கள் சங்கிலியால் பிணைத்து வைக்கின்றனர். இதனால் நோயாளிகள் அவதிப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை புச்சம்மாள் தெரு பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருபவர் உஷா (38). இவர் இன்று அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த 159ஏ மாநகர பேருந்து உஷாவை தோள்பட்டை பகுதியில் உரசியதில் அவர் பேருந்தில் சிக்சினார். பேருந்து அவரை சிறிது தூரம் இழுத்துச் சென்ற பிறகு திடீரென்று பிரேக் போட்டதால் விலா எலும்புகள் உடைந்து காயம் அடைந்தார்.

உடனடியாக அவர் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மருத்துவமனையில் அவரை அழைத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் தள்ளுவண்டியைத் தராமல் ஊழியர்கள் இழுத்தடித்துள்ளனர். இதனால் சிகிச்சைக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் நோயாளிகளை அழைத்துச்செல்லும் ஸ்ட்ரெச்சர் வண்டிகளை சங்கிலியால் பிணைத்து யாருக்கும் உபயோகப்படாமல் ஊழியர்கள் வைத்துள்ளதாகவும், பணம் தரும் நபர்களுக்கு மட்டும் பயன்படுத்துவதாகவும் நோயாளிகள் குற்றம் சாட்டினர். நீண்ட அலைக்கழிப்புக்கு பின்னர் பாதிக்கப்பட்ட உஷாவை சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

அப்பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால் பாதை மிகவும் குறுகலாக இருப்பதால் பொதுமக்கள் அடிக்கடி இது போன்று விபத்தில் சிக்கிக்கொள்வதாக அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

சுற்றுலா

33 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்