சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் வடசென்னையில் பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னையில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, வட சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அப்பகுதிகளில் மாநகராட்சி சார்பில், பெயரளவுக்கே மழை நீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால் பல பகுதிகளில், வீடுகளில் மழை நீர் புகுந்து, பொதுமக்களின் உடைமைகள் சேதமடைந்துள்ளன. அதனால் வடசென்னை மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தண்டையார்பேட்டை, வ.உ.சிநகர் பகுதியில் 28-வது குறுக்குத் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் தேங்கிய மழைநீர், வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் பலர், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். திருவொற்றியூர் ராஜாஜி நகர், கார்கில் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. சாலையில் அதிக அளவில் மழைநீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் வெளியில் வரமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதனால் அரசியல் பிரமுகர்கள் சார்பில், பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2015- ல் ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்த பெரம்பூர் நெடுஞ்சாலை, சீரமைக்கப்பட்டபோது, அதன் உயரம் அதிகரிக்கப்பட்டது. இதனால் பெரம்பூர் நெடுஞ்சாலையில் இருந்து மழைநீர் நெல்வயல் சாலை வழியாக சீனிவாசன் ஆச்சாரி தெரு, சீனிவாசன் முதலி தெரு, ராமகிருஷ்ணா தெருக்களில் 3 அடி அளவுக்கு தேங்கியுள்ளது. தாழ்வாக உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து, வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்துள்ளன. மழை நீரோடு, கழிவு நீரும் கலந்துள்ளதால் வீடுகளுக்குள் துர்நாற்றம் வீசுகிறது.
இதுபற்றி சீனிவாச முதலி தெருவில் வசிக்கும் உபேந்திரன் கூறும்போது, “சாலைகளின் உயரம் அதிகரிக்கப்பட்டதால் பெரம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து மழைநீர் ஆறாக பாய்ந்து சீனிவாசன் தெரு, ராமகிருஷ்ணன் தெருக்களில் வந்து தேங்குகிறது. மழை நீரை வெளியேற்ற மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மழைக் காலம் வந்து விட்டாலே அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 mins ago
இந்தியா
24 mins ago
இந்தியா
36 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
9 hours ago