மழைக்காலத்தில் ஏற்படும் மின் பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்காக வாட்ஸ் அப் எண்களை தமிழக மின் வாரியம் மாவட்ட வாரியாக வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மின் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் பிற பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மின் வாரியம் சார்பில் மின் பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதில் புகார் அளிக்க வாட்ஸ் அப் சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை - 9445850829, காஞ்சிபுரம், திருவள்ளூர் - 9444371912, ஈரோடு, சேலம், நாமக்கல் - 9445851912, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் - 9486111912, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை - 9443111912, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் - 9445855768, கோவை, திருப்பூர், நீலகிரி - 9442111912, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் - 8903331912, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி - 6380281341 ஆகிய எண்களில் வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கலாம். புகார் அனுப்பும் போது மின் பிரச்சினை விவரம், முழு முகவரி ஆகியவற்றை புகைப்படத்துடன் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
2 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
3 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago
தமிழகம்
4 hours ago