திரைப்பட இணை தயாரிப்பாளர் அசோக்குமார் தூக்கிட்டு தற்கொலை

By செய்திப்பிரிவு

திரைப்பட இணை தயாரிப்பாளர் அசோக்குமார் இன்று சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நடிகர், இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார். இவர் திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்தார். கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் ஒருவர் மிரட்டியதன் காரணமாக இன்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கடன் தொல்லை காரணமாக கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

25 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

52 mins ago

உலகம்

58 mins ago

ஆன்மிகம்

56 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்