மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பின்போது சுண்டல் வழங்க ஏற்பாடு

By செய்திப்பிரிவு

பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் 18 ஆயிரம் மாணவர்களுக்கு, மாலை நேர சிறப்பு வகுப்பின்போது, சுண்டல் வழங்க மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக ரூ.1 கோடியே 88 லட்சத்தை மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 32 மேல்நிலைப் பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் அடுத்த ஆண்டு 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் பயிலும் 18,119 மாணவ, மாணவியர் பொதுத்தேர்வை சந்திக்க உள்ளனர். இவர்களில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு 147 நாட்களும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 121 நாட்களும், அந்தந்த பள்ளிகளில் மாலை 4 முதல் 6 மணி வரை, ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

அப்போது, ஒவ்வொரு மாணவருக்கும் தினமும் ரூ.8 செலவில் சுண்டல் வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 6 நாட்களில், 6 வகையான சுண்டல் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகளின்போது சுண்டல் வழங்க, மாநகராட்சி நிர்வாகம், கல்வித்துறைக்கு அனுமதி வழங்கி, அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

க்ரைம்

12 mins ago

சினிமா

18 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்