வேளச்சேரியில் வீட்டு வாசல் முன்பு நின்றிருந்த பெண்ணிடம் செயினை பறித்து சென்ற இரண்டு இளைஞர்களை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து நகையை மீட்டனர்.
சென்னை, வேளச்சேரி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் பிரபு(36) இவரது மனைவி பத்மினி,(31). இவர் கடந்த 30 ந்தேதி காலை தனது வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் பத்மினி கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.
இது தொடர்பாக பத்மினி வேளச்சேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வேளச்சேரி போலீஸார் விசாரணை நடத்தியதில், செயின் பறிப்பு செயலில் ஈடுபட்ட செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த 1.அஜித்குமார்(20), வேளச்சேரியை சேர்ந்த மணிகண்டன்(22) என தெரிய வந்தது.
இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 1/2 சவரன் தங்க நகையும் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
9 mins ago
ஓடிடி களம்
19 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
54 mins ago
தொழில்நுட்பம்
58 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
2 hours ago
தமிழகம்
2 hours ago