தமிழகம் முழுவதும் ஸ்டாலின் 180 நாள் எழுச்சி யாத்திரை? - நவ. 7-ல் சென்னையில் தொடங்குகிறார்

By செய்திப்பிரிவு

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வரும் நவ.7 முதல் 180 நாட்கள் தமிழகம் முழுவதும் எழுச்சி யாத்திரை மேற்கொள்ள உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலையொட்டி ‘நமக்கு நாமே’ என்ற பெயரில், 234 தொகுதிகளிலும், ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். வழக்கமான தேர்தல் பிரச்சாரமாக இல்லாமல், பொதுமக்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடினார். சைக்கிள், ஆட்டோ, பேருந்து என பல்வேறு வாகனங்களில் அவர் பயணித்தார். வயல்வெளிகள், தொழிற்சாலைகள் என பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்றார்.

இந்நிலையில், மீண்டும் அவர் எழுச்சி யாத்திரை என்ற பெயரில் 180 நாட்கள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். வரும் நவ.7-ம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்த யாத்திரையை அவர் தொடங்க இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 mins ago

ஜோதிடம்

7 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்