இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) பாரத தர்ஷன் சுற்றுலா, ரயில் சுற்றுலா, பள்ளி கல்லூரிகளுக்கான கல்விச் சுற்றுலா, கார் போக்குவரத்து சேவைகள் போன்றவற்றை நடத்தி வருகிறது. இதற்கிடையே, மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சுற்றுலாவை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறியதாவது: இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகம் மூலம் பல்வேறு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ரயில் மட்டுமல்லாது, விமானம் மூலமாகவும் சென்னையிலிருந்து பல்வேறு சுற்று லாத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதன்படி, வரும் மாதங்களில் மலேசியா – சிங்கப்பூர், துபாய், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா – நியுசிலாந்துக்கு விமானம் மூலம் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா – நியூசிலாந்து (17 நாட்கள்) சுற்றுலாவுக்காக சென்னையில் இருந்து வரும் நவம்பர் 9-ம் தேதி விமானம் புறப்படுகிறது. ஒரு நபருக்கு ரூ.3.48 லட்சம் கட்டணமாகும். மலேசியா – சிங்கப்பூர் (7 நாட்கள்) சுற்றுலாவுக்காக சென்னை, திருச்சியில் இருந்து வரும் நவம்பர் 3-ம் தேதி விமானம் புறப்படுகிறது. ஒரு நபருக்கு ரூ.63 ஆயிரம் கட்டணம். துபாய் – அபுதாபி (5 நாட்கள்) சுற்றுலாவுக்காக சென்னையில் இருந்து வரும் நவம்பர் 24-ம் தேதி விமானம் புறப்படும். ஒரு நபருக்கு ரூ.53,700 கட்டணமாகும். இலங்கை (6 நாட்கள்) சுற்றுலாவுக்காக சென்னையில் இருந்து வரும் நவம்பர் 11-ம் தேதி விமானம் புறப்படும். ஒரு நபருக்கு ரூ.41 ஆயிரம் கட்டணமாகும்.
இலங்கை (6 நாட்கள்) சுற்றுலாவுக்காக மதுரையில் இருந்து வரும் நவம்பர் 11-ம் தேதி விமானம் புறப்படும். ஒரு நபருக்கு ரூ.39,200 கட்டணமாகும். விமானக் கட்டணம், விசா, ஹோட்டலில் தங்கும் வசதி, ஏசி வாகனம், உணவு, நுழைவுக் கட்டணம் ஆகியவை இதில் அடங்கும். மேலும், தகவல்களைப் பெற சென்னை – 9840902918, 9840902919 மதுரை – 9840902915, 9003140714 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
46 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
க்ரைம்
4 hours ago