இனிக்கும் நினைவுகள் | கறுப்புச் சட்டை சாமியும் கறுப்புச் சட்டை மாமாவும்

By ம.சுவாமிநாதன்

கார்த்திகை வரும்போதே அதுவரை கோபம்கொள்ளும் மழையைச் சாந்தமாக்கி, லேசான குளிரை உடல்மீது போர்த்தும். அப்போது மனதில் கிளர்ந்து எழும் இனிய நினைவுகளில் இரண்டு கறுப்புச் சட்டைக்காரர்கள் முக்கியமானவர்கள். அருகில் உள்ள கிராமத்திற்கு சைக்கிளில் சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியரை, ‘வாத்தியாரே’ என்று அழைப்பவர்கள், கார்த்திகை மாதம் ஆரம்பித்தவுடன் ‘வாத்தியார் சாமி’ என்று அழைக்கும்போது எனக்கு அதுவரை இல்லாத பெருமிதம் பொங்கும். மளிகைக்கடை மூப்பனார், பழக்கடைத் தேவர் எனத் தொழில் சார்ந்த பெயர்களுக்குப் பின்னால் வரும் சாதிப் பெயர்கள் அழிந்து, ‘மளிகைக்கடை சாமி’, ‘பழக்கடை சாமி’ என அனைவரும் சாமிகளாக ஊருக்குள் உலாவரும் சமத்துவ மாதம்தான் இந்தக் கார்த்திகை!

ஊரே ‘கறுப்புச் சட்டை, கறுப்பு வேட்டி’ அணிந்துகொண்டு ஐயப்ப கோஷம் பாடுவதுபோலத் தோன்றும். பதினெட்டு வருடங்கள் மலைக்குச் சென்றுவந்த என் அப்பாவை அனைவரும் குருசாமி என அழைக்கும்போது, மகிழ்ச்சி ஊற்றெடுக்கும். என்னுடன் பிறந்தவர்களுக்கு மணிகண்டன், மஞ்சுளா தேவி போன்ற பெயர்களுக்குப் பின்னாலும் சபரிமலை சரித்திரம் உண்டு. எனக்குப் பல வருடங்களுக்குப் பின்னால் பிறந்த என் தங்கை, அப்பா மலையில் இருந்து வீட்டிற்குத் திரும்பிய அன்று பிறந்ததால் ‘மஞ்சமாதா’ என்று பெயர்பெற்றார். ‘மணிகண்டன்’ என்கிற என் தம்பிக்கும் இப்படி ஒரு பெயர்ச் சரித்திரம் உண்டு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்