பயணம்தான் மனித வாழ்க்கை முறையில் தலைகீழ் மாற்றத்தை உருவாக்குகிறது. பயணக் காதலர்கள் ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு, கண்டம் விட்டுக் கண்டம் எனப் பயணப்பட்டுத்தான் அரிய விஷயங்களைக் கண்டறிந்து உலகத்துக்குச் சொல்லியிருக்கிறார்கள். அவ்வாறு மாதக்கணக்கில் பயணம் செய்த மீகாமன்கள் (கடலோடிகள்) எல்லாரும் உணவுக்கு என்ன செய்திருப்பார்கள் என்று யோசித்தபோது, புளிச்சோறு நினைவுக்கு வந்துவிட்டது! ‘பட்டணம்தான் போகலாமாடி, பணங்காசு தேடலாமாடி’ என்று பயணம் புறப்படும்போதே ‘கட்டுச் சோத்தைக் கட்டிக் கொள்ளடி’ என்று பாடுவது நம் ஊர். ‘புளியோதரை’, ‘புளிச்சோறு’, ‘புளிச்சாதம்’, ‘கட்டுச் சோறு’ என்று பலவிதமாக அழைக்கப்பட்டாலும் எங்கள் திருநெல்வேலியில் அது ‘கட்டுச்சோறு’தான்!
ஊருக்கு ஊர் கட்டுச்சோறு செய்யும் விதத்தில் சின்னச் சின்ன மாற்றங்கள் உண்டு. ‘புளிக்காய்ச்சல்’, ‘புளித்தண்ணி’, ‘புளியானம்’ எனச் சோற்றில் ஊற்றும் குழம்பின் பெயர்கூட ஊருக்கு ஊர் மாறுபடுகிறது. பொதுவாகப் பயணம் செய்வதற்கு முந்தைய நாள் இரவு, கட்டுச்சோறு கட்டுவார்கள். ‘சம்பா’ அரிசி தண்ணீரை உறிந்து விடும் என்பதால் கட்டுச்சோறு கட்டுவதற்கு அது நன்றாக இருக்கும். இப்போது நிலக்கடலை, கடலைப் பருப்பு எல்லாம் சேர்த்துக் கட்டுச்சோறு கட்டுகிறார்கள். இதில் ஒருசிலர் முந்திரிப் பருப்புகூடச் சேர்த்து கட்டுச்சோறு கட்டுகிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
தமிழகம்
6 hours ago
க்ரைம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
கல்வி
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
கல்வி
8 hours ago
தமிழகம்
8 hours ago